நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் ஆண்டவரின் பாஸ்காத் திருவிழிப்புஉயிர்ப்பு பெருவிழா திருப்பலி, ஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, ஆகிய நிகழ்வுகள் வெகு விமர்சையாக, ஏராளமான நம்பிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகச் சிறப்பாக நடைபெற்றது. பூண்டி மாதா பசிலிக்காவின் அதிபர், உதவி-அதிபர், அருள்தந்தையர்கள், அருள்கன்னியர்கள் மற்றும் இறைமக்கள் சார்பாக உங்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். Dear Beloved Children of...
புனித வெள்ளி
நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் புனித வெள்ளி (இயேசுவின் திருப் பாடுகள்) திருச்சிலுவைப்பாதை, இறைவார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திரு விருந்து, ஆகிய நிகழ்வுகளில் ஏராளமான அன்னையின் பக்தர்கள் கலந்து கொண்டனர். மரியே வாழ்க
புனித வியாழன்
நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் புனித வியாழன் (ஆண்டவரின் இராவுணவு) திருவழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது. அதில், இறைவார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை இடமாற்றப் பவனி, நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. திரளான அன்னையின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குருத்து ஞாயிறு
நமது பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில், இயேசு ஆண்டவருடைய பாடுகளின் ஞாயிறு (குருத்து ஞாயிறு) குருத்தோலை பவனியும், ஆடம்பர கூட்டுப் பாடல் திருப்பலியும் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான இறை மக்கள், அன்னையின் அன்பு பக்தர்கள் கலந்து கொண்டு இறையாசிர் பெற்றுச் சென்றனர்.
திருநீற்றுப் புதன்
நமது பூண்டி மாதா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியோடு தவக்காலம் இனிதே துவங்கப்பட்டது. அதிபர், பங்குத் தந்தை, உதவி அதிபர், மற்றும் ஏனைய அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினார்கள். ஏராளமான இறைமக்கள் திருவழிபாட்டில் கலந்து கொண்டு நெற்றியில் சாம்பல் பூசி, காவி உடை, செபமாலை அணிந்து தவக்காலத்தை துவங்கினார்கள்.
Happy New Year-2024
பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே! நமது பூண்டி மாதா பசிலிக்காவின் அதிபர், உதவி அதிபர் மற்றும் ஏனைய அருட்தந்தையர்கள் சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு-2024 நல்வாழ்த்துக்கள். Dear beloved children of Poondi Madha!On behalf of the Rector, Vice Rector and other Priests of the Poondi Madha Basilica Wish You a Happy New Year-2024.
கிறிஸ்து பிறப்பு பெருவிழா
பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே! நமது பூண்டி மாதா பசிலிக்காவின் அதிபர் மற்றும் உதவி அதிபர் தந்தையர்கள் சார்பாக உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்.
இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் (All Souls’ Day)
பூண்டி அன்னையின் அன்புப் பிள்ளைகளே! இன்று (02-11-2023) பூண்டி மாதா பசிலிக்காவில் இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவை முன்னிட்டு இறையடியார் லூர்து சேவியர், இராயப்பர் அடிகளார் மற்றும் பொதுமக்களினுடைய கல்லறைகள் முன்பு செபம் செய்யப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. திரளான பங்கு மக்கள் பங்கேற்று தங்களுடைய மரணித்த உறவுகளுக்காக இறைவனின் இரக்கத்தை வேண்டினார்கள். மரியே வாழ்க
அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா
பூண்டி மாதா திருத்தலப் பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழாவானது குடந்தை ஆயர் மேதகு F.அந்தோனிசாமி அவர்களால் கொடியேற்றப்பட்டு, கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஏராளமான இறைமக்கள் கலந்துகொண்டு அன்னையின் ஆசி பெற்று சென்றனர். மரியே வாழ்க! At Poondi Madha Basilica, the Solemnity of the Nativity of Mother Mary was inaugurated by Most Rev. F. Antonisamy Bishop of Kumbakonam, who hoisted...
77 வது சுதந்திர தின நாள்
இன்று 77 வது சுதந்திர தின நாள் நம் பூண்டி மாதா பேராலயத்தில் கொண்டாடப்பட்டது. நம் பேராலயத்தின் அதிபர் & பங்குத்தந்தை. பேரருள் பணி. சாம்சன் தேசியக்கொடியேற்றினார். அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா திருப்பலியில் ஏராளமான இறைமக்கள் பங்கு பெற்று இறையாசீர் பெற்றனர்.